செங்கல்பட்டு, மார்ச் 17: பல்வேறு பகுதிகளில் வாகனங்களை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 பைக்குகளை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு ரயில் நிலையம், பஸ் நிலையம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோயில், பரனூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பைக்குகள் தொடர்ந்து திருடு போயின. இதுகுறித்து மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு தாலுகா, டவுன் ஆகிய காவல் நிலையங்களில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். இதையடுத்து, ஏஎஸ்பி ஆஷேஷ் பச்சாரே தலைமையில் 5 பேர் கொண்ட, குற்றப்பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டியில் நேற்று அதிகாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை, போலீசார் மறித்து நிறுத்தி விசாரித்தனர்.