திருவள்ளூர்: பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற லோகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு பில் போடும் இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
