நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: விசிக மாவட்ட செயற்குழு தீர்மானம்

 

திருப்புவனம், ஜூலை 28: திருப்புவனத்தில் விசிக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலையா தலைமையில் நேற்று நடந்தது. பொருளாளர் ஆதிவளவன். துணைச் செயலாளர்கள் கண்ணன். வழக்கறிஞர் பாலமுருகன், வேல்முருகன், மகளிர் அணி அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டல துணைச்செயலாளர் முத்துராசு, மாநில துணை செயலாளர்கள் அய்யனார், ஜெயபால், கார்த்திக். ஒன்றியச் செயலாளர்கள் ராஜபிரபு, கீழடி பிரபு, பீட்டர் வளவன், திருமாராஜா. மானாமதுரை நகர செயராளர் பாரதிராஜா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உளுந்தூர் பேட்டையில் நடைபெறவுள்ள திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு 40 வாகனங்களில் தோழர்களை அழைத்து செல்ல வேண்டும். தமிழக அரசு ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Related Stories: