சிங்கம்புணரி, ஜூலை 24: சிங்கம்புணரி சண்டிவீரன் கூடத்தில் இருந்து 4வது ஆண்டாக புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். பெரிய கடை வீதி சேவக பெருமாள் கோயில் வழியாக கொன்னையூருக்கு நடை பய
ணம் சென்றனர். இரண்டு நாட்கள் நடைபயணம் செய்து கோயிலை அடைந்தனர். அங்கு பால்குடம் எடுத்தும் அக்னிசட்டி மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதில் சிங்கம்புணரி மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
