திண்டுக்கல், மார்ச் 15: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதி உள்ளது. இந்த 7 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டிஐஜி முத்துசாமி முன்னிலை வகித்தார். இதில் தென் மண்டல போலீஸ் ஐஜி முருகன் கலந்துகொண்டு சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டம் முழுவதும் உள்ள 142 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையை நிறுத்தி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இதர வாக்குச்சாவடிகளிலும் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.