பாடாலூர், மார்ச் 14: ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்காளர் தான் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபேட் என்ற கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கருவிகள் வாக்காளர் தாம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ளும் வகையிலும், வாக்களித்த 7 வினாடிகளுக்குள் பதிவான வாக்கினை பார்த்து உறுதி செய்து கொள்ளும் வகையிலும், இந்த கருவியை இந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.