பேர்ணாம்பட்டு, மார்ச் 12: பேரணாம்பட்டு பெரிய மஜித் தெருவை சேர்ந்தவர் அம்ஜத் அஹமத்(54), ராணிப்பேட்டையை சேர்ந்த சிவகுமார்(41), ஐதராபாத்தை சேர்ந்த ராகேஷ் ஜெயின்(60), ஆகியோர் நேற்று தொழில் சம்பந்தமாக பேரணாம்பட்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது பேரணாம்பட்டு தாலுகா அலுவலகம் அருகே எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி கவிந்து விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சிவகுமார், அம்ஜத் அஹமதி மற்றும் ராகேஷ் ஜெயின் படுகாயமடைந்தனர்.