ஜெயங்கொண்டம், மார்ச்12: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நேற்றிரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இந்த வழிபாட்டை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், இலையூர் காசிவிசுவநாதர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனிஸ்வரர், இறவாங்குடி ஏகாம்பரேஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், குவாகம் பிரகதீஸ்வரர், ஆலயம் காசி விஸ்வநாதர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரர், தேவாமங்கலம் பால்வண்ணநாதர்.