ஜெயங்கொண்டம், மார்ச்12: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தனியார் சர்க்கஸ் கம்பெனி ஒன்று கடந்த 2020 மார்ச் மாதம் துவங்கி ஒரு வாரம் நடைபெற்றது. உடனடியாக கொரோனா தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஓராண்டாக இயங்கவில்லை. அதில் வேலைக்காக வந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். மீதமிருந்தவர்கள் கிராமங்களுக்கு சென்று கொத்தனார், சித்தாள் வேலை பார்த்து பிழைப்பு நடத்தினர். போக்குவரத்து துவங்கி நடந்து வரும் நிலையில் ரயில், பஸ் போக்குவரத்து நடைபெற்றும், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் வைபவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், எங்களது சர்க்கஸ் மட்டும் இயங்க அனுமதி இதுவரை கொடுக்கவில்லை என தொழிலாளர்கள் புலம்பி வந்தனர்.