பாடாலூர், மார்ச் 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஏற்கெனவே பற்றி எரிந்த தனியார் பஞ்சு மில்லில் வெளியே போடப்பட்டிருந்த பஞ்சுகள் நேற்று திடீரென தீப்பற்றியது.ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமம் அருகே, சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (52) என்பவருக்கு சொந்தமான பருத்தி மில் உள்ளது. இங்கு, விவசாயிகளிடருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியை அரைத்து பஞ்சு தனியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.