கிருஷ்ணராயபுரம் தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

குளித்தலை, மார்ச் 10: குளித்தலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுதல் குறித்த பயிற்சி, சப்கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சட்டமன்ற தேர்தல் அலுவலரும் குளித்தலை சப்கலெக்டர் ஷேக் அப்துல்ரகுமான் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்தார். தேர்தல் உதவி அலுவலர் கலியமூர்த்தி, மண்டல தேர்தல் அலுவலர் வைரபெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் வேட்பாளர் விவரங்கள் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்துவது, உபயோகப்படுத்தப்படும் பேலட் யூனிட் எண்ணிக்கை ஏற்றவாறு ஸ்க்ரோலிங் சரி செய்வது உள்ளிட்ட பயிற்சிகள். மேலும் தேர்தல் நடைமுறைகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories: