ஏரல், மார்ச் 10: ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை விட்டு விட்டு 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் காந்தி சிலை பஸ் ஸ்டாப் அருகில் சாலையில் வாகனம் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில்களில் சாக்கடை ஓடை நிறைந்து மழைநீருடன் சேர்ந்து நுழைவு வாயில்களில் முட்டளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பஜார் பகுதிக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.