40 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிடவேண்டும் தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு: அடுத்த கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும் என காவிரி ஆணையம் திட்டவட்டம்

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாகு, மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் நீர் பங்கீடு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் வைத்த கோரிக்கையில்,”ஜூன் 22,ல் இருந்து பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 6.737 டி.எம்.சி தண்ணீருக்குப் பதிலாக, வெறும் 2.662 டி.எம்.சி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் 4.075 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தங்களது நீர்த்தேக்கங்களில் குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளதாக கர்நாடகா கூறுவதை ஏற்க முடியாது. பிப்ரவரி முதல் மே 2026 வரையிலான கோடைக்காலத்தில், கர்நாடகா தனக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தண்ணீரைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம் ஆகும்.

எனவே ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி மற்றும் ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி தண்ணீரை தமிழகம் பெறுவதை உறுதி செய்யும் வகையில், கர்நாடகாவின் நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட அந்த மாநில அரசுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழக அரசின் கோரிக்கையை பதிவு செய்து கொண்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர், இந்த நிலைமையைக் கவனத்தில் கொண்டு, நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீரை குடிநீர் தேவைக்காக விவேகத்துடன் பயன்படுத்துமாறு படுகை மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

மேலும்வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில், மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அடுத்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை அதாவது இந்த நிலைமையை மறுஆய்வு செய்ய முடிவு செய்கிறோம் என்று தெரிவித்தார்.

Related Stories: