கடந்த முறையை விட 1,262 பேர் ஆப்சென்ட் அதிகம்

 

வேலூர்: வேலூரில் கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வை 15 மையங்களில் 5,736 தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இதில் 5,551 பேர் தேர்வு எழுதினர். 185 பேர் ஆப்சென்ட் ஆகினர். வினாத்தாள் கசிவு காரணமாக நீட் மறுதேர்வு நேற்று நடந்தது. இதில், வேலூரில் 16 மையங்களில் 6,253 பேர் விண்ணப்பித்தனர். இதில் 4,806 பேர் நீட் தேர்வை எழுதினர். 1,447 பேர் ஆப்சென்ட் ஆகினர். கடந்த ேம மாதம் நடந்த தேர்வை விட நேற்று நடந்த 1,262 பேர் அதிகமாக ஆப்சென்ட் ஆகினர். வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வின் மீதான நம்பிக்கை இழந்து வருவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.