வேலூர் அரசு கலைக்கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

 

வேலூர், ஜூன் 19: வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கப்பட உள்ளது. முதற்கட்ட கலந்தாய்வில் 700 பேர் சேர்ந்தனர். வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக்கல்லூரியில் உள்ள 984 இடங்களில் சேர 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தரவரிசைப்பட்டியல், www.mgacvlr.edu.in எனும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்த முதற்கட்ட கலந்தாய்வில் 700 மாணவர்கள் இளநிலை பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.

Related Stories:

தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: ஆர்டிஓ பங்கேற்பு வேலூர், ஜூன் 22: வேலூர் கோட்டை பூங்காவில் தொல்லியல் துறை சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் ஆர்டிஓ பங்கேற்றார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் வேலூர் கோட்டை பூங்காவில் நேற்று யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் ஆர்டிஓ செந்தில் குமார் தலைமை தாங்கினார். சென்னை தொல்லியல் துறை துணை பொறியாளர் பரணிதரன், 10வது என்சிசி பட்டாலியன் சுபேதார் பிரசாத், பாரத் கல்வி குழும இயக்குநர் இந்திரநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.