மது விற்ற 11 பேர் கைது

தூத்துக்குடி, மார்ச் 8: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக போலீசாரின் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நேற்றும் மாவட்டம் முழுவதும்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உடன்குடி: குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், முனியாண்டி மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடன்குடி பஸ் ஸ்டாப் பின் பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்த தேரியூர் ஆண்டிவிளையைச் சேர்ந்த விஜயன்(62), தேரியூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மதன்ராஜ்(39), உடன்குடி தேசியமயமாக்கப்பட்ட வங்கி பகுதியில் மது விற்பனை செய்த பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம்(45) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 65மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: