கடலூர்: கடலூரில் 6 மாதமாக மின் கட்டணம் செலுத்தாததால் அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள் காற்று, தண்ணீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
