வருசநாடு கிராமத்தில் மரக்கிளை ஒடிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வருசநாடு, மார்ச் 8: வருசநாடு கிராமத்தில் சூறைக்காற்றால் மரக்கிளை ஒடிந்து லாரி மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வருசநாடு பகுதியில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், சிங்கராஜபுரம் செல்லும் சாலையோரத்தில் இருந்த இலவம் மரக்கிளை ஒன்று முறிந்து, சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது விழுந்தது. இதனால், லாரி பலத்த சேதமடைந்தது. மேலும் சாலையின் குறுக்கே மரக்கிளை கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வருசநாடு, மயிலாடும்பாறை மின்சார வாரிய அலுவலர்கள் மற்றும் வருசநாடு காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளையை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: