சத்தியமங்கலம், மார்ச் 8: திருப்பூரைச் சேர்ந்தவர் ஜாய்சன் கிருபாகரன் (19) என்பவர் குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் நேரு நகர் பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்ததால் துக்கம் விசாரிப்பதற்காக நேற்று காரில் வந்துள்ளனர். நேரு நகர் ஜெய்சக்தி தியேட்டர் அருகே வந்த போது திடீரென முன்பகுதியில் எஞ்சினில் இருந்து தீப்பற்றி எரிவதைக் கண்ட காரில் இருந்தவர்கள் உடனடியாக காரை விட்டு இறங்கி தப்பி ஓடினர். தகவல் அறிந்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும், கார் முழுவதும் தீயில் கருகி சேதமடைந்தது.