திருச்சி, மார்ச் 7: சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுத்திட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் உள்ளபோது திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை கடத்தல் நடைபெற்றால் அதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மற்றும் மதுபானக்கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பு அலுவலராக (நோடல் ஆபீசர்) டாஸ்மாக் உதவி மேலாளர் தாசில்தார் ரவிசங்கர் (செல்: 8190890912) நியமிக்கப்பட்டுள்ளார்.