புதுடெல்லி: மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எத்தனால் கலந்த பெட்ரோலின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள இ20 எனப்படும் 20 சதவீத எத்தனால் கலப்பு திட்டத்தையும் கடந்து, பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்பதை ஊக்குவிக்கும் வகையில், 22 சதவீதம், 25 சதவீதம், 27 சதவீதம் மற்றும் 30 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு மத்திய கலால் வரி விலக்கை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.
