சென்னை: சென்னை மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பணி நிரந்தரம் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். உழைத்த பணியாளர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைப்பதோ, வழங்க மறுப்பதோ நியாயமல்ல என்று அன்புமணி கூறியுள்ளார்.
