ஈரோடு, மார்ச் 7: தேர்தல் ஆணையத்தின் புதிய உத்தரவின் காரணமாக எஸ்.ஐ.,க்கள் ஈரோடு மாவட்டத்திற்குள்ளே பணியிடம் மாற்றம் செய்யப்பட உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 116 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என 69பேர் பணியிடம் மாற்றம் செய்ய பட்டியல் தயாரிக்கப்பட்டு, மேற்கு மண்டல ஐ.ஜி., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த 69பேரும், முதற்கட்டமாக 23பேரும், இரண்டாம் கட்டமாக 9பேர் என 32 எஸ்.ஐ.,க்கள் பணியிடம் மாற்றம் செய்து மேற்கு மண்டல ஐ.ஜி. தினகரன் உத்தரவிட்டார். ஆனால், பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 32பேரும் பணியில் இருந்து விடுவிக்கப்படாமல் இருந்தனர்.