பெரியகுளம், மார்ச் 7: பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டி(30). இவரது தந்தை ராஜேந்திரன்(54) வடகரை தைலாரம்னம் கரடு அருகில் உள்ள புளியந்தோப்பில் புளியமரத்தில் ஏறி புளியம்பழம் அடித்துக்கொண்டிருந்தார். அப்போது கால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் பெரியகுளம் வடகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.