ேதவதானப்பட்டி அருகே விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

தேவதானப்பட்டி, மார்ச் 7: தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டியில் விவசாயிகளுக்கு இயற்கை கரைசல் தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், இயற்கை விவசாயத்திற்கு பயன்படும்  ஜீவாமிர்தம் கரைசல் எப்படி தயாரிப்பது என செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் இயற்கை விவசாயத்தினால் ஏற்படும் நன்மைகள், ரசாயன உரக்கட்டுப்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினர். இதில்  காமக்காபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related Stories: