தேனி, மார்ச் 7: தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் 1561 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 388 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பெரியகுளம்(தனி) சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 398 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.