நெல்லை அருகே சாக்கு மூடையில் பெண் உடல் கொலையா? போலீஸ் விசாரணை

நெல்லை, மார்ச் 7: நெல்லை அருகே தோட்டத்தில் கிடந்த சாக்கு மூடையில் இறந்த நிலையில் பெண் உடல் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து ஊருக்கு மேல்புறம் பூலாங்குளத்திற்கு செல்லும் சாலையில் வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரது தோட்டத்தில் நேற்று ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. இதை பார்த்தவர்கள் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர்.

அதில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல் இருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டுள்ளாரா? எதற்காக சாக்கு மூடையில் கட்டி கொண்டு வரப்பட்டது? என்ற விபரங்கள் தெரியவில்லை. அப்போது அந்த பகுதிக்கு ஆட்டோ ஒன்று வந்து சென்றதற்கான தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணாசிங், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விராணை நடத்தினர். இதில் அவர் விருதுநகர் சந்திகூட தெருவைச் சேர்ந்த பெரியசாமி மனைவி அழகுமீனா என்ற ஜெனிபர் (51) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: