கேடிசிநகர், மார்ச் 7: நெல்லையில் சேதுராம பாண்டியனின் 6வது நினைவேந்தலையொட்டி அவரது சிலைக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப், லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம் சார்பில் அதன் நிறுவனர் சேதுராம பாண்டியனின் 6ம் ஆண்டு நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு சிஎன் கிராமத்தில் உள்ள சேதுராம பாண்டியன் நினைவாலயத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தலைமை வகித்த அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் மூர்த்தி தேவர், சேதுராம பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வகாப், மாநகரச் செயலாளர் ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, திமுக வக்கீல் அணி ஏஎல்பி தினேஷ், இளைஞரணி வேல்ராஜா, சுதா மூர்த்தி, மல்லிகை சீனிவாசன், குண்டுபாண்டியன் மற்றும் பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர். இதில் மாநில பொதுச்செயலாளர் ராமசுப்பு, துணை பொதுச்செயலாளர் நயினார் பாண்டியன், அமைப்புச் செயலாளர் மாரிதேவர், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள் முருகன், பாலுத்தேவர், கோவை மாவட்டச் செயலாளர் முருகத்தேவர், வக்கீல் அணி மாநில செயலாளர் செல்வதனேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.