பட்டாம்பியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

 

பாலக்காடு,ஜூன்9: பாலக்காடு திருமிற்றங்கோடு அடுத்த நெல்லிக்காட்டை சேர்ந்தவர் சசிகுமார் (40). இவர் பட்டாம்பி ரயில் நிலையம் அருகே ஜாம்நகர்- திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் மோதி உயிரிழந்தார். பட்டாம்பி போலீசார் சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சசிகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: