நோட்டு, புக், பேக் வாங்க அலைமோதிய கூட்டம்

குன்னூர், ஜூன் 4: இன்று பள்ளிகள் திறப்பை முன்னிட்டு குன்னூர் மார்க்கெட்டில் பள்ளி உபகரணங்கள் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காகப் பொதுமக்களின் கூட்டம் நேற்று அலைமோதியது. பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் தங்களது குழந்தைகளுக்குத் தேவையான பள்ளிப் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப் பைகள் மற்றும் மதிய உணவுப் பைகள், சீருடைகள், காலணிகள் மற்றும் பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்காகக் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மார்க்கெட் பகுதிக்கு வந்து வாங்கி சென்றனர். பொதுமக்களின் வருகை திடீரென அதிகரித்ததால், குன்னூர் மார்க்கெட்டில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

Related Stories: