தாம்பரம்: தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுது ஏற்பட்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தாம்பரம் - சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மார்க்கத்தில், தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கு என தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 8 மணியளவில், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில், தாம்பரம் அருகே உள்ள சிக்னல் திடீரென பழுதடைந்தது. இதனால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.