புதுடெல்லி: நேபாள பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற பலேந்திர ஷா இந்தியா- நேபாள எல்லை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கானல் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின்னர் ஷிசிர் கானல் பேட்டியளிக்கையில் கூறியதாவது:
நாம் திறந்த மனதுடன் அமர்ந்து பேசும்போது, எந்தப் பிரச்னையும் பெரிதல்ல, எந்த எல்லையும் மிகவும் சிக்கலானதல்ல. நாங்கள் இந்தியாவைத் திறந்த மனதுடனும், தெளிவான பார்வையுடனும், நேபாளத்தின் பொருளாதார மாற்றம் என்ற ஒரே, வெளிப்படையான செயல்திட்டத்துடனும் பார்க்கிறோம். தீவிர தேசியவாத ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பிரச்னைகளைத் தீர்க்க நாங்கள் அமைதியான, தரவுகள் அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுகிறோம்.
எல்லைக்கு அப்பால் நாம் பார்க்கும்போது, வளர்ந்து வரும் இந்தியாவைக் காண்கிறோம். தீவிர லட்சியமும் அதிநவீன தொழில்நுட்பமும் கொண்ட இந்தியாவுடன் நாங்கள் இணைய விரும்புகிறோம். அதற்குப் பதிலாக, லட்சியம் கொண்ட நேபாளத்தின் ஆற்றலை நாங்கள் கொண்டு வருகிறோம் என்றார்.
