வாகன சோதனை ஆத்தூரில் தீவிரம்

சின்னாளபட்டி, மார்ச் 6: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.6ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி ஆத்தூர் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு செம்பட்டி- ஒட்டன்சத்திரம் சாலை கோழிப்பண்ணை பிரிவு அருகே வட்டாட்சியர் பவித்ரா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பிரஸ்நேவ் தலைமையில் போலீசார் அவ்வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி பணம், சட்டவிரோதமான பொருட்களை எடுத்து செல்கிறார்களா என ஆய்வு செய்தனர்.

Related Stories: