பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 6: ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் (கலால்) பொறுப்பு தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் 80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கொரோனோ பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கு சென்று அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தபால் வாக்குகளை பெறுவது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சசி, தேர்தல் துணை வட்டாட்சியர் மணி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ் பாபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: