வள்ளியூர், மார்ச் 4: வள்ளியூர் புறவழிச்சாலையில் அதிக உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவதோடு விபத்து அபாயம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெல்லை, நாகர்கோவிலை இணைக்கும் முக்கியச் சாலையாக திகழும் வள்ளியூர் புறவழிச்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. அத்துடன் வள்ளியூரில் இருந்து அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ. அலுவலகம், சமத்துவப்புரம், ஹவுசிங்போர்டு, சண்முகபுரம், குளத்துகுடியிருப்பு, கேசவனேரி, ராஜாபுதூர் கிராமங்களுக்கு செல்வோரும், வள்ளியூருக்கு இதர வேலைகளுக்கு வருவோரும் இந்த 4 வழிச்சாலையை கவனத்துடன் கடக்கவேண்டி உள்ளது.