மின் திருட்டில் ஈடுபட்டவரிடம் ரூ.44 ஆயிரம் வசூல்

தூத்துக்குடி, மார்ச் 4:  தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மதுரை அமலாக்க கோட்டத்தின் தூத்துக்குடி உபகோட்ட அமலாக்க அதிகாரிகள், தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் புதுக்கோட்டை பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட கூட்டாம்புளி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மின்நுகர்வோருக்கு ரூ.5 லட்சத்து 13 ஆயிரத்து 788 இழப்பீட்டு தொகையாக விதிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்கு உரிய சமரசத்தொகை ரூ.44 ஆயிரம் செலுத்தியதால், அவர்கள் மீது போலீசில் புகார் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மின்திருட்டு சம்பந்தமான தகவல்களை மதுரை அமலாக்க செயற்பொறியாளளுக்கு 94430 37508 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: