தேர்தல் பணியை வழங்க வேண்டும் புகைப்பட கலைஞர்கள் கோரிக்கை

திருப்புத்தூர், மார்ச் 4: திருப்புத்தூர் சட்டமன்ற தேர்தலில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகளுக்கான வீடியோ கேமராக்கள் பணியை புகைப்பட கலைஞர்களுக்கு வழங்க அச்சக சங்கத்தினர் தேர்தல் அதிகாரியிடம் மனு வழங்கினர்.

மனுவில் கூறியிருப்பதாவது: திருப்புத்தூர் வீடியோ மற்றும் போட்டோகிராபர் அசோசியேஷன் எனும் பெயரில் எங்கள் புகைப்பட கலைஞர்களுக்கான அமைப்பு இயங்கி வருகிறது. இதில் சுமார் 170க்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் வீடியோ கேமரா மூலம் ஒளிப்பதிவு தொழில் செய்து வருகின்றனர்.

எதிர்வரும் ஏப்ரல் 6ல் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நிலவரங்களை படம் பிடிக்க எங்களது கலைஞர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். ஆகவே திருப்புத்தூர் தேர்தல் அதிகாரி எங்கள் கோரிக்கையை ஏற்று ஒளிப்பதிவு பணியினை எங்களுடைய அமைப்பு சார்ந்த உறுப்பினர்களுக்கு வழங்க கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: