திண்டுக்கல், மார்ச் 3: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசார விளம்பரம் செய்ய ஊடக, கண்காணிப்பு குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து உள்ளூர் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில், ‘திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள், எப்எம் ரேடியா போன்வற்றில் தேர்தல் சம்பந்தமான அரசியல் விளம்பரங்கள், கட்சி- சுயேச்சை வேட்பாளர்கள், பிரசார விளம்பரங்களை அனுமதியின்றி வெளியிடவும், ஒளிபரப்பவும் தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.