சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக இணைய பதவி ஆசை காரணம் இல்லை என்று அந்த கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தவெக-வில் இருந்து வெளிப்படையாக அழைப்பு வந்தது எனவும், இதன் பிறகு நடந்த கட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனையை அடுத்து அமைச்சரவையில் இணைந்ததாகவும் கூறியுள்ளார். பல சதிகள் நடந்தபோதும் திமுக கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன் என்று திருமாவளவன் பேட்டியின் போது கூறினார்
