மேல்மலையனூர், மார்ச் 3: மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் சிறப்பு பெற்ற திருத்தலம் ஆகும். இங்கு அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், இக்கோயிலின் சிறப்புமிக்க மாசி பெருவிழா வருகிற 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவில் மயானக் கொள்ளை, திருத்தேர் வடம் பிடித்தல், தீமிதி விழா, அம்மன் வீதியுலா போன்ற நிகழ்வுகள் இடம் பெறும்.