பத்மநாபபுரம் தொகுதியில் மேலும் ₹73 ஆயிரம் பறிமுதல்

நாகர்கோவில், மார்ச் 3: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் தேர்தல் அலுவலர் சிவகுருபிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி ஆய்வு செய்வது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சக உரிமையாளர்கள், விடுதி, திருமண மண்டப உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் அச்சக உரிமையாளர் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், திருமணமண்டபங்களில் நிகழ்ச்சிகள் குறித்து பதிவு செய்வது, முக கவசம் அணிதல் சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்ற தகுதி பறக்கும்படை தாசில்தார் தாசில்தார் ஆதாரமில்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட R1,30,000 பறிமுதல் செய்திருந்தார். இந்நிலையில் நிலையான கண்காணிப்பு அலுவலர் தாசில்தார் பாண்டியம்மாள் ஆதாரமில்லாமல் கொண்டு வரப்பட்ட மேலும் ₹73,530ஐயும் இதே தொகுதியில் பறிமுதல் செய்தார். பின்னர் அந்த தொகை தக்கலை உதவி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: