கோலாலம்பூர்: சமீபத்தில் முடிந்த தாமஸ் கோப்பை பேட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர்களிடம், இந்திய வீரர்கள் 0-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை தழுவி, வெண்கலப் பதக்கம் பெற்றனர். இந்நிலையில், மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் கோலாலம்பூர் நகரில் இன்று துவங்கவுள்ளன.
இதில் இந்திய நட்சத்திர பேட்மின்டன் வீரர் லக்சயா சென், இந்தோனேஷியாவின் மொகமத் ஜகி உபைதுல்லா உடனும், இந்திய வீரர் தருண் மன்னெபள்ளி, பிரான்சின் தோமா ஜூனியர் போபோவ் உடனும், இந்தியாவின் கிரண் ஜார்ஜ், அலெக்ஸ் லேனியர் உடனும் மோதவுள்ளனர்.
