சியோல்: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் தென் கொரியாவின் சுவோன் நகரில் நடைபெற உள்ளன. இதன் அரையிறுதிப் போட்டி ஒன்றில் தென் கொரியா – வடகொரியா மகளிர் அணிகள் மோதவுள்ளன. இதற்காக, 8 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக, வடகொரியா கால்பந்து வீராங்கனைகள் உள்பட 39 பேர் அடங்கிய குழுவினர், நேற்று சியோல் நகருக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மோசமாக உள்ள நிலையில், தற்போது நடக்கும் கால்பந்து போட்டி சாதகமான விஷயமாக கருதப்படுகிறது.
