திருவில்லிபுத்தூர், மார்ச் 2: அகில இந்திய கராத்தே போட்டியில் திருவில்லிபுத்தூர் மாணவர்கள் வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜப்பான் சிட்டோரியு சார்பில் அகில இந்திய ஓபன் கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் இருந்து ‘இன்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாடமி ஆஃப் இந்தியா’ சார்பில் சென்சாய், செபஸ்தியான் தலைமையில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.