தொழிலாளி தற்கொலை

வருசநாடு, மார்ச் 2: கடமலைக்குண்டுவை  சேர்ந்தவர் விஜயராஜ் (30), கூலித்தொழிலாளி. மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச் னை தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின்போது மனைவி கலைவாணி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டில் தனியாக இருந்த விஜயராஜ் மனமுடைந்து கடந்த 26ம் தேதி டீசலை தனது மீது ஊற்றி தீக்குளித்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயராஜ் நேற்று முன்தினம் இறந்தார். இது தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: