ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாலைக்குடி செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொத்தியார்கோட்டை, பால்குளம், வலமானூர் விலக்கு வழியாக திருப்பாலைக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகவும் இந்த சாலை விளங்கி வருகிறது.