ஆர்.எஸ்.மங்கலம் அருகே மண் அரிப்பால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 2:  ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பாலைக்குடி செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொத்தியார்கோட்டை, பால்குளம், வலமானூர் விலக்கு வழியாக திருப்பாலைக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகவும் இந்த சாலை விளங்கி வருகிறது.

இந்நிலையில் இச்சாலையின் இரு ஓரங்களும் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு ரோட்டோரங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் ரோட்டோர மண் அரிப்பால், ரோடு சேதமடைந்து வருகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர் வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது விபத்துக்களில் சிக்கும் நிலை தொடர்கிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையோர பள்ளங்களை சீரமைத்து சாலை சேதமடைவதை தடுத்து நிறுத்தி பாதுகாக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: