சண்டிகர்: பொதுமக்களை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் மோடிதான் முதலில் வெளிநாடு சுற்றுப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார். மக்களை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் என கூறும் அவரால் வீட்டில் இருந்து ஏன் பணியாற்ற முடியவில்லை? எங்கோ நடக்கும் போருக்கு நம் நாட்டில்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என பகவந்த் மான் கூறினார்.
