கொலம்போ: மாலத்தீவில் வாவூ அட்டோலில் சுமார் 50மீட்டர் ஆழத்தில் உள்ள குகையை ஐந்து இத்தாலிய டைவர்களை கொண்ட குழுவானது ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டது. அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாலத்தீவில் பொழுதுபோக்கு டைவிங்கிற்கான வரம்பானது 30மீட்டர் ஆகும். மோசமான வானிலை காரணமாக மற்றவர்களின் சடலங்களை மீட்பதில் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்ட மாலத்தீவு ராணுவ டைவர் முகமது மஹூதி உயிரிழந்தார்.
