பல்வேறு வழக்கில் தொடர்பு 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தஞ்சை, மார்ச் 2: தஞ்சை அருகே வல்லம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நீலகண்டன்(38). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(38). இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின்பேரில் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜவகர் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவணத்தின் அடிப்படையில் இருவரையும் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: