அறந்தாங்கி, மார்ச் 2: மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து அறந்தாங்கியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அறந்தாங்கி அருகே சிலட்டூர், கொல்லன்வயல், தாந்தாணி, அழியாநிலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை வழங்கவில்லை. இதனால் ஏன் நிவாரணத்தொகை வழங்கவில்லை, எவ்வளவு நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை கேட்டும், முறையிட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.